யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பம்மைமடுவில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழ மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு (01.04) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுததவும், குறித்த மாணவியை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.