மாத்தறை- தொட்டமுன பகுதியில் நில்வள கங்கையில் இருந்து ஆண் ஒருவரின் தலை அழுகிய நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது கொலையா அல்லது தற்கொலை செய்து கொண்ட நபரொருவருடையதா என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த நபர் தொடர்பிலும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, உடம்பு இல்லாமல் தலை மட்டும் மிதந்து வந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.