நீர்கொழும்பு, தலஹேன பகுதியை சேர்ந்த காணாமல் போன குழந்தையை கண்டறிய பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
2 வயது மற்றும் 10 மாத வயதுடைய குழந்தை கண்டவர்கள் தகவல் வழங்குமாறு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
காணாமல் போன குழந்தையின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, குழந்தையயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அவசர தொலைபேசி இலக்கம் 1929 அல்லது தொலைபேசி எண் 0112 778911 மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.