ஆறு பொலிஸ் நிலையங்களைச் சோ்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று சாணக்கியனை அவரது அலுவலகத்தில் சுற்றிவளைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றமை குறித்து விளக்கம் கோரினர்.
மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, சம்பாந்துறை பொலிஸ் நிலையங்களைச் சோ்ந்த பொலிஸாரே சாணக்கியன் அலுவலகத்தை நோக்கி இன்று படையெடுத்தனர்.
இதன்போது பொலிஸாரிடம் எமது மக்களுக்கான போராட்டத்தின் தார்ப்பரியத்தை எடுத்துரைத்து அவர்களை அனுப்பிவைத்ததாக சாணக்கியன் தெரிவித்தார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.