கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சசிகலா, கடந்த 27ஆம் திகதி விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். வைத்தியசாலையில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.
இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.இதையடுத்து, இன்று சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஒரு வாரம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த சசிகலா, செல்லும் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா பாவித்த வாகனத்திலேயே சசிகலா பயணிப்பதாக கூறப்படுகிறது.
No comments
Note: Only a member of this blog may post a comment.