
யாழிலிருந்து கனடாவுக்கு தனது மகளின் குழந்தைப் பேற்றைப் பார்க்கச் சென்ற 48 வயதான குடும்பப் பெண் ஒருவர் மகளின் கணவரால் பலதடவைகள் வ ல்லு றவு க்குள்ளானதாக கனடாப் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. தனது தாயாரை கணவர் வ ல்லு றவு க்குள்ளாக்குகின்றார் என மகளே தனது கணவனைப்பற்றி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயார் 25 வயதான தனது மூத்த மகளுக்கு முதலாவது குழந்தை பிறப்பிற்காக கடந்த 2019ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கனடாவுக்கு மகளால் அழைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கொரோனாவால் அங்கு தொடர்ச்சியாக தங்கியுள்ள தாயாரை மருமகன் பலதடவைகள் வ ல்லு றவு க்குள்ளாக்கியதாக மகள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இரவு தாயார் துாக்கத்தில் இருக்கும் போது தனது கணவர் அவரை வ ல்லு றவு செய்ததாகவும் அதனை தான் நேரடியாக கண்ணுற்றதாகவும் அவர் பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.
மனைவியின் உ றவுகள் இதனை மூடிமறைத்து பொலிசாருக்கு முறையிட வேண்டாம் என தடுத்த போதும் மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மருமகனின் சகோதரிகள் இருவர் நேற்று முன்தினம் உரும்பிராயில் உள்ள தாயாரின் வீட்டுக்குச் சென்று கலகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Note: Only a member of this blog may post a comment.