விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை விற்பனை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் உறுப்பினர்கள் 15 பேரையும், பெப்ரவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் பயன்பாட்டில் இருந்த வெடிபொருட்கள், மற்றும் T56 துப்பாக்கிகளை விற்பனை செய்ய முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹைல் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பெப்ரவரி 25ஆம் திகதி இந்த வழக்கு தொடர்பான சமர்ப்பணங்களை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவர் முன் வைப்பார் என, குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
No comments
Note: Only a member of this blog may post a comment.