வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் நேற்று தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சனி (41) என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு குடும்ப விவகாரமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.