கண்டி திகன – அம்பாக்கோட்டை பிரதேசத்தில் இன்று மாலை இரண்டு தடவைகள் வெடிச் சத்தம் ஏற்பட்டதால் பிரதேச மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் இன்று அதிகாலையும், இன்று காலையிலும் இரண்டு நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதனிடையே இன்று மாலை சுமார் 6 மணி தொடக்கம் 6.27 வரை இரண்டு வெடிப்புச் சத்தங்கள் ஏற்பட்டதாக அம்பாக்கோட்டை மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அம்பாக்கோட்டையில் உள்ள இராணுவ முகாமில் ஏதேனும் பயிற்சிகள் இடம்பெற்றதால் இப்படி சத்தம் உண்டாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம், இன்று காலை ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களையும் உறுதிசெய்ததோடு இன்றுமாலை ஏற்பட்ட வெடிப்புச் சத்தத்தினால் அதிர்வலை ஏதும் பதிவாகவில்லை என்றும் உறுதிசெய்துள்ளது
No comments
Note: Only a member of this blog may post a comment.