வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 676 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேருக்கும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவிலில் 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஏழு பேர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஒருவர் தனிமைப்படுத்தப்படாதவர்.
சண்டிலிப்பாயில் 3 பெர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தொற்றாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
தெல்லிப்பழையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தொற்றாளருடன் தொடர்புகொண்டிருந்தமையினால் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்.
புதுக்குடியிருப்பில் ஒருவர். ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர். தம்பகொலபட்டின தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருதனார்மட உப கொத்தணியில் 136 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.