நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 35 ஆவது உயிரிழப்பு நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
78 வயதான குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், பிரேத பரிசோதனைகளின் மூலம், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பே குறித்த நபர் உயிரிழப்பதற்கு காரணமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.