கோப்பாய் பொலிஸார் மாவீரர் தினம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொண்ணுத்துறை ஐங்கரநேசன் எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
தடை உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை (24) ஆம் திகதி நீதிமன்றுக்கு சமுகமளிக்குமாறும் இன்று அறிவித்தல் தரப்பட்டுள்ளது என எமது செய்தி சேவைக்கு பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பொலிஸார் இன்று பொண்ணுத்துறை ஐங்கரநேசன் அலுவலகத்துக்கு சென்று கட்டளையை கையளித்து விட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.