இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை பேருந்தின் நடத்துனருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியில் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த பேருந்தின் சாரதி, நடத்துனர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டநிலையில் PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் தனதுவீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக சமூகத்தொற்று ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் பொதுமக்கள் சுகாதாரத் திணைக்களத்தினரின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து சமூக இடைவெளியினை பேணி தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் யாழ் மாவட்ட அரசஅதிபர் தெரிவித்தார்
No comments
Note: Only a member of this blog may post a comment.