யாழ்ப்பாணத்திலுள்ள ரௌடிகளை வழிநடத்தும் பிரான்ஸ்வாசி ஒருவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ரௌடியொருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் வைத்து நேற்று (8) விசேட அதிரடிப்படையினரால் ரௌடி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அங்குள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் ரௌடிக்குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.
கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியின் முன்பாக பிரபல ரௌடி தனுரொக்கை விரட்டி விரட்டி வெட்டிய விவகாரத்தில் கைதாகியுள்ள இன்னொரு ரௌடியின் வீட்டின் முன்பாகவே இவர் கைதானார்.
அவரது கைத்தொலைபேசியை ஆராய்ந்தபோது பிரான்ஸிலுள்ள ஒருவர் இந்த தாக்குதல்களை நெறிப்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. யாழில் இயங்கிய முன்னாள் ரௌடியொருவரே தற்போது பிரான்ஸிலிருந்து இந்த குழுக்களை இயக்குகிறார்.
பெருமாள் கோயிலடி வாள்வெட்டை தொடர்ந்து இணுவில், உடுவில், ஓட்டுமடம், நீர்வேலியுள்ள வீடுகள் மீது தனுரொக் குழு என நம்பப்படும் குழு தாக்குதல் நடத்தியது. வாள்வெட்டுடன் தொடர்புடைய வீடுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
No comments
Note: Only a member of this blog may post a comment.