அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்த வி.மணிவண்ணன் உள்ளிட்ட இரண்டு பேரை நீக்கியுள்ளதாக, யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வலிங்கம் மணிவண்ணன், மகேந்திரன் மயூரன் ஆகிய இருவரையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒரு பிரதியை யாழ் மாநகர முதல்வரிற்கு, யாழ் தெரிவித்தாட்சி அலுவலர் அனுப்பி வைத்துள்ளார்
No comments
Note: Only a member of this blog may post a comment.