நாட்டில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கே கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது,
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 969 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய தொற்றுறுதியான 188 பேர் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 95 பேர் இன்று வீடு திரும்ப உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.