கட்சியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தலமையில் நல்லூரிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
நேற்றைய தினம் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி மாநாடும் பெருமளவு ஆதரவாளர்களுடன் நல்லூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் தலமையில் நல்லூரிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
நேற்றைய தினம் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி மாநாடும் பெருமளவு ஆதரவாளர்களுடன் நல்லூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்காவில் நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி பல்வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் இவர் தெரிவாகியுள்ளார் ,
சென்னையில் வசித்துவரும் 12 வயதான லிடியன் நாதஸ்வரம் தமிழ் திரை இசையமைப்பாளர் (போறோம்போக்கு என்கிற பொதுவுடைமை ) வர்சனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது,
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 55 பேர்ச் காணி வழங்கப்படவுள்ளது. அதில் வீடொன்றை அமைக்க 15 பேர்ச் காணியையும் விவசாய நடவடிக்கைகளுக்காக 40 பேர்ச் காணியும் வழங்கப்படவுள்ளது.
“யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. உண்மையை கண்டறிந்து, மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார். இதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2009 இலிருந்து வலியுறுத்தி வருகிறது“
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரன்.
இன்று (16) யாழில் நடந்த தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்-
தமிழ் இளைஞர்களிடம் பேசும் பலர் பாதி உண்மையை மட்டும்தான் சொல்கிறார்கள். ஊடகங்கள் அதவிட மோசம். அவர்களும் பாதி உண்மையை மட்டும்தான் சொல்வார்கள். தமிழீழு விடுதலைப் புலிகள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என சுமந்திரன் சொன்னார் என்றுதான் சொல்வார்கள்.
யுத்தக்குற்றங்கள் இழைக்காமல் உலகத்தில் எந்த போரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என்று எங்கும், எப்போதும் சரித்திரத்தில் நடைபெறவில்லை. அது மட்டுமல்ல, போரின் போது ஒரு தரப்பார் மட்டும்தான் குற்றம் இழைத்தார்கள் என்றும் எங்கும் நடக்கவில்லை. பேரென்றாலே கொடூமானது. உயிரை கொல்வது. மனிதநேயத்திற்கு எதிரானது.
சர்வதேச மேற்பார்வை உள்ளதால்தான், பிரதமர் கிளிநொச்சியில் அந்த கருத்தை சொன்னார். தென்னாபிரிக்காவை போல உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நிறுவி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையை சொல்லியிருக்கிறார். உண்மையை கண்டறிவோம், மன்னிப்போம், மறப்போம் என பிரதமர் கூறியிருக்கிறார்.
உண்மை கண்டறியப்படுவது அத்தியாவசியம். உண்மை கண்டறியப்படாமல், பேசப்படாமல், ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரு காலமும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. இதை 2009 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வருகிறோம். உண்மை கண்டறியப்பட்டு, அந்த உண்மையின் அடிப்படையில் நீதி செய்யப்பட வேண்டும்.
முதன்முறையாக உண்மையை ஆணைக்குழுவின் முன்பாக வந்து உண்மைகளை சொல்லியுள்ளார். குற்றமிழைத்தவர்களே முன்வந்து, இதைஇதை செய்தோம் என அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். தென்னாபிரிக்காவில் நடந்தது அதுதான்.
உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு அமைத்தபோது, பொலிஸ், இராணுவ அதிகாரிகள் முன்வந்து உண்மையை சொன்னார்கள். முழுமையான உண்மையை சொன்னால் மன்னிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்பதே தென்னாபிரிக்கா கைக்கொண்ட முறைமை.
அப்படி விண்ணப்பித்த பலரது மன்னிப்பு விணணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முழுமையான உண்மையை சொல்லாத பலரது வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நேற்று பிரதமர் சொன்னதில் ஒரு தவறுள்ளது. தென்னாபிரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யவில்லையென்றார். அது தவறு. பலர் மீது வழக்குகள் உள்ளன. அது, அவர்கள் முழுமையான உண்மையை சொல்லாததால் தாக்கல் செய்யப்பட்டது.
படையினரும் குற்றமிழைத்திரக்கலாமென மஹிந்த சொன்னதையோ, கிளிநொச்சியில் பிரதமர் மறப்போம், மன்னிப்போம் என்று சொன்னதையோ ஆதரிக்க முடியாது. இதை பிரதமருக்கு தெளிவாக சொல்லிவைக்க விரும்புகிறோம். உண்மை கண்டறியப்பட வேண்டும்.
பிரதமருக்கு இதை அழுத்தம் திருத்தமாக சொல்லும் அதேவேளை, எங்கள் தரப்பிற்கும் இதை சொல்லிக் கொள்ள வேண்டும். எங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி, குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம்.
சட்டமா அதிபர் என்னிடம் கேட்டார், ரவிராஜ் கொலையாளிகளை தண்டிக்க வேண்டுமென நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள்தான் மேன்முறையீடு செய்கிறீர்கள். ஆனால் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை குற்றவாளிகளை விடுவிக்க கேட்கிறீர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதி, இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நீதியா என கேட்டார். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்.
எல்லாம் மற்றவர்கள் செய்தவர்கள் என சொல்ல கூடாது. நாங்கள் சுயாதீன குழுவாக சென்று சர்வதேசத்திற்கு சென்று நியாயம் கேட்கும்போது, எங்கள் தரப்பிலிருந்து இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றியும் பேசுகிறோமா என்பதிலேயே அது வெற்றியடையுமா இல்லையா என்பது தங்கியிருக்கிறது.
தந்தை செல்வா- பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தம் செய்யபோது, அதில் சமஷ்டி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. செல்வா- டட்லி ஒப்பந்தத்திலும் சமஷ்டி என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. சமஸ்டி கட்டமைப்பிலான தீர்வை பற்றி ஒஸ்லோவில் உடன்பாடு எட்டப்பட்டபோது, சமஷ்டி என குறிப்பிடப்படவில்லை என்றார்.
பொதுவாகவே முஸ்லிம் மக்கள் நாய்களை வளர்ப்பதில்லை தங்களது மார்க்கத்திற்கு முரண் என்பதால், ஆனால் தமிழர் செல்லப்பிரணியாகவும் குழந்தை போன்று பாதுகாவலன் போன்று நாய்களை பராமரித்து கொள்பவர்கள், அண்மையில் நற்பட்டிமுனை சிவன் கோயில் அண்டிய இரு தமிழரின் வளர்ப்பு நாய், சிவசக்தி வித்தியாலயத்தின் வீதியருகே 3 நாய் கிட்டங்கி வீதியருகே 2 நாய் காணாமல் போய் உள்ளது.
நற்பட்டிமுனை ஆற்று பக்கம் நாய் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் பீதியில் உள்ளார்கள். ஆட்டிறைச்சிக்கு விலை பெரும் கிராக்கி நிலவுதால் நாய் இறைச்சி விற்பனை செய்யவாய்ப்பு நிலவுதால் ஆட்டிறைச்சி பதிலாக அல்லது கலந்து நாய் இறைச்சி விற்பனை செய்ய சாத்திய கூறு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மருதமுனையில் இப்படியொரு சம்பவம் சித்திரை வருடப்பிறப்பில் ஆட்டிறைச்சி தேடிச்சென்ற தமிழ்மக்களுக்கு நாய் உரித்து விற்பனை செய்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கல்முனை சந்தாங்கேணி மைதானம் அருகே சந்தை கழிவை சாப்பிட உலா வந்த நாய்களே அறுத்து இறைச்சியாக்கினார்கள். தற்போதும் இப்படியொரு ஆபத்து நிலவுகின்றது பொதுமக்கள் அவதானமாக பேணவும்.
கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கும் நிலையில், எப்போது நடைமுறைப்படுத்துவீா்கள் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த வருடம் மே மாதம் ஐ றோட் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என பிரதமா் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமா் ரணில் விக்ரமசிங்க நேற்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது வீதி அபிவிருத்தி சம்பந்தமான விடயம் பேசப்படுகையில், ஐ றோட் செயற்றிட்டம் எதற்காக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனா்.
இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி, இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறியிருந்தார்.
அப்போது இந்த வருடம் என்றால் இந்த வருடத்தில் எப்போது ஆரம்பமாகும்? எந்த மாதத்தில் ஆரம்பமாகும்? என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பினார். தொடா்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன்,
ஐ றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறினார். இதனையடுத்து சபையிலிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியுடன் பேசிய பிரதமா் ரணில் விக்ரமசிங்க எதற்காக ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு காலதாமதமாகின்றது? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து இந்த வருடம் மே மாதமளவில் ஐ றோட் செயற்றிட்டம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.
மேலும் ஐ றோட் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டம் என்பதுடன், வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 206.08 கிலோ மீற்றா் நீளமான 53 வீதிகளும், உள்ளுராட்சி சபைகளுக்கு சொந்தமான 105.40 கிலோ மீற்றா் நீளமான 116 வீதிகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக 40352 மில்லியன் ரூபாய் நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.இவர் தற்போது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இரசாயனவியல் பாடம் கற்பித்து வருகிறார்.
கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியான குணாளினி ஓய்வுநிலை தொழினுட்ப உத்தியோகத்தர் பாலசுப்பிரமணியம் தம்பதிகளின் புதல்வியாவார்.
Yes யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே அவரின் கைப்பையிலிருந்த அலைபேசி திருடப்பட்டுள்ளது.
55 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிதிறன் அலைபேசி (ஸ்மார்ட் மொபைல்) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிகழ்வில் பங்கேற்றிருந்த போது எனது கைப்பைக்குள்ளிலிருந்து
திருடப்பட்டுள்ளது என்று பிரதமரின் செயலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முதல் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
முறைப்பாட்டாளரின் அலைபேசி இணைப்பை வழங்கும் நிறுவனமான மொபிட்டலிடமிருந்து அலைபேசி
திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட இடம்தொடர்பான விவரங்களைக் கோருவதற்கு கட்டளை
வழங்குமாறு அந்த அறிக்கையை பொலிஸார் தாக்கல் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பதை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன்,
பொலிஸாரால் கோரப்படும் தகவல்களை வழங்குமாறு மொபிட்டல் நிறுவனத்துக்கு கட்டளையிட்டார்.
இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலையின் குறித்த அவசர சிகிச்சைப் பகுதியிலேயே அண்மையில் தாதிகள் இருவர் காமலீலைகளில் ஈடுபட்டும் அதை மறைத்து அனைத்து தாதிகளும் ஆர்ப்பாட்டித்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை குறித்த நிகழ்வுக்கு கொள்ளையில் பிடிபட்டு யாழ் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த விஜயகாந்தும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தனது இளமை காலத்தில் நடந்த மறக்க முடியாத காதல் சம்பவத்தை விபரித்துள்ளார்.
அவ்வாறு வாகனத்தில் பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில் குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் இருந்து பலகைகளை கொள்வனவு செய்வோம். பலகைகளை தெரிவு செய்ய வேறு நபர்கள் வருவார்கள். பலகைகளை பற்றிய அனுபவம் எனக்கில்லை.
ஒரு முறை குருணாகல் பிரதேசத்தில் உள்ள மர ஆலைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தியிருந்த போது, மூன்று பெண்கள், வெட்டி ஒதுக்கப்பட்ட பலகைகளை சேர்த்து எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சென்றனர்.
அவர்களில் எனக்கு பிடித்த பெண்ணொருவர் இருந்தார். அவர் தான் ஜெயந்தி. பலகைகளை எடுத்துச் செல்லும் பெண்களிலும் பலகை பாரமாக இருக்கின்றதா என்று கேட்டேன்.
சும்மா இரு என்று கூறி விட்டு அந்த பெண்கள் சென்று விட்டனர். என்னுடன் வாகனத்தில் வந்த சாரதியிடம் அந்த பெண் எந்த வீட்டுக்கு செல்கிறார் என்று போய் பார்க்குமாறு கூறினேன்.
செல்லும் அந்த பெண்ணின் வீட்டை பார்த்தாயா என்று கேட்டேன். அதற்கு சாரதி வீதியோரத்தில் உள்ள வீடுதான் என்று சொன்னார்.
இதன் பின்னர் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு செல்லும் போது அந்த வீட்டுக்கு அருகில் சென்றதும் நாங்கள் செல்லும் வாகனம் பழுதுப்பட ஆரம்பித்து விட்டது.
பலகை வாங்க சென்ற நான், பின்னாளில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் எனது மனைவி.
27 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற வாழ்க்கை இருந்தது. தற்போது நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கின்றேன்.
தற்போதும் அப்படித்தான். தற்போது முப்பது ஆண்டுகளாக என் மனைவி, வாழையிலையில் அனுப்பி வைக்கும் சாப்பாட்டைதான் சாப்படுகிறேன்.
என் மனைவி எனக்கு தாயை போன்றவர். எனது உடைகளை தயார் செய்வது, உணவுகளை தயார் செய்வது எல்லாம் மனைவி தான்.
நான் வீட்டில் இருந்து புறப்படும் போது எங்கு போகிறீர்கள் என்று என் மனைவி என்னிடம் ஒரு போதும் கேட்டதில்லை. அப்படி கேட்டிருந்தால், நான் இந்த உயரத்திற்கு வந்திருக்க மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.